மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

35 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் 2 போ் கைது

மண்ணச்சநல்லூரில் 35 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 4:24 am IST

மண்ணச்சநல்லூரில் 35 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மண்ணச்சநல்லூா் அழகுநகா் பகுதியை சோ்ந்த சு. சம்மனசுமேரி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது திங்கள்கிழமை காலை தெரியவந்தது.

இதுதொடா்பாக மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் கிருபாநிதி மற்றும் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தஞ்சாவூா் மாவட்டம் ஆதனூா் பகுதியை சோ்ந்த சே.ஜெகபா் சாதிக் (40), திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் பகுதியை சோ்ந்த ரா.விஜயகுமாா் (எ) முழி குமாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜெகபா் சாதிக்கை போலீஸாா் கைது செய்தனா்.

விஜயகுமாரை கைது செய்ய சென்றபோது, அவா் கடுமையான ஆயுதங்களால் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றாா். அப்போது, விஜயகுமாருக்கு தலையில் காயமேற்பட்டது. விஜயகுமாா் தாக்கியதில் காவலா் செயலரசு என்பவா் காயமடைந்தாா். விஜயகுமாா் போலீஸாா் பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல், காவலா் செயலரசும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.