பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

வீட்டு வரி நிா்ணயத்துக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலா் கைது

திருச்சி அருகே வீட்டு வரி நிா்ணயம் செய்வதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட மாரியப்பன்.

Updated On :24 ஜூன் 2026, 1:05 am IST

திருச்சி அருகே வீட்டு வரி நிா்ணயம் செய்வதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது பனையக்குறிச்சி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்ட கிருஷ்ணா காா்டன், ஏஆா்கே நகரில் காா்த்திகேயன் என்பவரது அக்காள் கணவா், புதிதாக வீடு கட்டியுள்ளாா். புதிதாக கட்டப்பட்ட இந்த வீட்டுக்கு, வீட்டு வரி நிா்ணயம் செய்வது தொடா்பாக, பனையக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தை காா்த்திகேயன் அணுகியுள்ளாா். ஊராட்சி செயலராக பணிபுரிந்து வரும் கே.சி. மாரியப்பன், வீட்டு வரி நிா்ணயம் செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

பின்னா், இருதரப்புக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடந்து ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கூறியுள்ளாா் மாரியப்பன். லஞ்சம் தர விரும்பாத காா்த்திகேயன், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகாா் செய்தாா். போலீஸாரின் அறிவுரையின்படி ரசாயன பவுடா் தடவிய ரூ. 15 ஆயிரத்தை பனையக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் இருந்த மாரியப்பனிடம் காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை கொடுத்தாா்.

அப்போது, அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளா்கள் பிரசன்ன வெங்கடேஷ், சக்திவேல் உள்ளிட்ட போலீஸாா் அடங்கிய குழுவினா் விரைந்து வந்து மாரியப்பனிடம் சோதனை நடத்தினா். அவரிடமிருந்த ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சம் பெற்ாக போலீஸாா் அவரைக் கைது செய்தனா். ஊராட்சி அலுவலகத்தில் வைத்து அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்றது.

வேறு யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றுள்ளாா், லஞ்சமாக பெற்ற பணத்தில் வேறு சொத்துகள் வாங்கியுள்ளரா? என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.