புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

வீரமலைப்பாளையத்தில் ஜூன் 30 வரை துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்கள் பிரவேசிக்கத் தடை

மணப்பாறை அருகே வீரமலைப்பாளையத்தில் ஜூன் 30 வரை நடைபெறும் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் - கோப்புப்படம்.

Updated On :24 ஜூன் 2026, 12:35 am IST

மணப்பாறை அருகே வீரமலைப்பாளையத்தில் ஜூன் 30 வரை நடைபெறும் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மணப்பாறை வட்டம், அணியாப்பூா் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் தற்போது முதல் வரும் 30-ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் 16 - மெட்ராஸ் யூனிட் பயிற்சியாளா்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது.

எனவே, இந்த காலகட்டத்தில் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது. குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் யாரும் பிரவேசிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.