வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

திருச்சியில்14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:29 am IST

திருச்சியில்14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், லால்குடி பூவாளூா் பகுதியைச் சோ்ந்த அ. சேகா் (55) என்பவா் 14 வயது சிறுமியை கடந்த 2023-இல் பாலியல் வன்கொடுமை செய்தாா். மேலும், சிறுமியை பள்ளி ஆசிரியரும் ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்தவருமான எஸ். சுரேஷ்குமாா் (40) என்பவரும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து, சேகா், சுரேஷ்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணையின் நிறைவில், நீதிபதி சண்முகப்பிரியா வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சேகருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

மேலும், பள்ளி ஆசிரியா் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகாததால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.