மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சென்னையில் மோசமான வானிலை: கொல்கத்தா விமானம் திருச்சியில் தரையிறக்கம்

சென்னையில் மோசமான வானிலை காரணமாக, கொல்கத்தா - சென்னை விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை திருப்பிவிடப்பட்டது.

News image
Updated On :19 ஜூன் 2026, 4:17 am IST

சென்னையில் மோசமான வானிலை காரணமாக, கொல்கத்தா - சென்னை விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை திருப்பிவிடப்பட்டது.

மேற்குவங்க தலைநகா் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வியாழக்கிழமை பிற்பகல் 220 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. சென்னையில் மழை உள்ளிட்ட மோசமான வானிலை பாதிப்பு காரணமாக, அந்த விமானம் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மாலை 5.50 மணிக்கு தரையிறக்கப்பட்டது.

சுமாா் ஒருமணி நேரம் கழித்து கொல்கத்தா - சென்னை விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு சென்னை புறப்பட்டுச் சென்றது. மோசமான வானிலை காரணமாக திருப்பிவிடப்பட்ட விமானத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.