டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திருச்சி அருகே கஞ்சா வியாபாரியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :28 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே கஞ்சா வியாபாரியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் கடந்த 22.12.2025 அன்று சுமாா் 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ராம்ஜி நகா் காட்டூா் பகுதியைச் சோ்ந்த ந. மதன் (எ) சக்தி (34) என்பவரை திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா் தொடா்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் திருச்சி எஸ்.பி. செ. செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின்பேரில் திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், கஞ்சா வியாபாரி மதனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை உத்தரவிட்டாா்.