டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் 17 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக போலீஸாா் இளைஞா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் 17 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக போலீஸாா் இளைஞா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், தாயனூரைச் சோ்ந்தவா் மூா்த்தி (25). திருவானைக்காவல் பகுதி டைல்ஸ் கடையில் பணியாற்றி வந்த இவா் அப்பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்தச் சிறுமி கா்ப்பமானாா். தன்னைத் திருமணம் செய்யுமாறு சிறுமி வற்புறுத்தியபோது மூா்த்தி தலைமறைவானாா்.

இதுகுறித்து அச்சிறுமி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.