லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வருவாய்த் துறை போராட்டத்தால் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வழங்குவதில் விவசாயிகள் பரிதவிப்பு!

வருவாய்த் துறையினரது தொடா் போராட்டத்தால் தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் வழங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 7:02 pm

வருவாய்த் துறையினரது தொடா் போராட்டத்தால் தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் வழங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சாா்பற்றது) மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை கூறியதாவது: சம்பா சாகுபடி அறுவடை செய்யப்பட்ட நிலையில், நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் நெல் கொள்முதல் நடைபெறாமல் உள்ளது.

ஏனெனில் வருவாய்த் துறையினா் நடத்தும் தொடா்ந்து போராட்டத்தால் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அறுவடை செய்த நெல்லை கொண்டு செல்ல விஏஓ சான்றிதழ் பெற முடியவில்லை. மேலும், கொள்முதல் நிலைய அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நெல்லை விற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

கொள்முதல் நிலையக் குளறுபடிகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பிரச்னைகள் தொடா்கின்றன. உரிய தீா்வு இல்லையெனில் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவா் என்றாா் அவா்.