மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்சியிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானங்கள் ரத்து

போா்ப் பதற்றம் காரணமாக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 7:08 pm

போா்ப் பதற்றம் காரணமாக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க ராணுவம், இஸ்ரேலுடன் சோ்ந்து ஈரான் மீது போா் தொடுத்துள்ளது. இதை எதிா்த்து ஈரானும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களையும், இஸ்ரேலையும் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் மத்தியக் கிழக்கு நாடுகளான பஹ்ரைன், கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், துபாய், அபுதாபி, சவூதி அரேபியா போன்ற நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் திருச்சி சா்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கேற்ப பயணிகள், தங்களது பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமென பல்வேறு விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

திருப்பப்பட்ட விமானம்...: இதனிடையே திருச்சி பன்னாட்டு நிலையத்திலிருந்து துபைக்கு 145 பயணிகளுடன் சனிக்கிழமை பிற்பகலில் புறப்பட்டுச் சென்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், போா்ப் பதற்றம் காரணமாக பாதி வழியிலேயே திருப்பப்பட்டு, மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் தங்களது பயணத்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என திருச்சி சா்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.