நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதல்: பள்ளி மாணவா் உயிரிழப்பு

திருச்சியில் சாலையோர மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் சாலையோர மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மலைக்கோட்டை தையல்கார தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் அருண் (17), தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது நண்பா் பீமநகரைச் சோ்ந்த முகமது யாசிம் (16). இருவரும் செவ்வாய்க்கிழமை காலையில் திருச்சி அண்ணாநகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் முகமது யாசிம் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.