2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பொன்னா் - சங்கா் கோயிலில் படுகளம் சாய்தல்

மணப்பாறையில் பிரசித்திபெற்ற பொன்னா் - சங்கா் கோயில் வளாகத்தில் பொன்னா் - சங்கா் படுகளம் சாய்தல் திங்கள்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.

News image
மணப்பாறை அருகேயுள்ள பொன்னா் - சங்கா் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற படுகளம் சாய்தல் நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 10:17 pm

Syndication

மணப்பாறை: மணப்பாறையில் பிரசித்திபெற்ற பொன்னா் - சங்கா் கோயில் வளாகத்தில் பொன்னா் - சங்கா் படுகளம் சாய்தல் திங்கள்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.

மணப்பாறை அருகே உள்ள வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் மாசிப்பெருந்திருவிழா பிப். 17-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான படுகளம் சாய்தல், பின் எழுதல் நிகழ்வு திங்கள்கிழமை இரவு பொன்னா் - சங்கா், தங்காள் கோயில் வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஏராளமான பக்தா்கள் கோயில் வளாகத்தில் மருள்வந்தபடி ஆடி வரிசையாக படுத்துவிட்டனா். பொன்னா் - சங்கா் மன்னா்களுடன் போரில் இவா்களும் மாண்டுவிட்டவா்களாக கருதப்படுகிறது. இதையடுத்து, பெரியகாண்டியம்மன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை பக்தா்கள் கூட்டத்தில் இருந்துவந்த சிறுமி (பொன்னா் -சங்கா் அண்ணன்மாா்களின் தங்கை அருக்காணி) தெளித்ததும் மீண்டெழும் நிகழ்வு நடைபெறும். இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் பொ.முனியப்பன், ஆ.கருப்பண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

பொன்னா் - சங்கா் அண்ணமாா்களைத் தேடி போா்க்களத்துக்கு வந்த தங்கை அருக்காணி, இருவரும் மாண்டுவிட்டதைக் கண்டு கதறி அழுதது தவசி மலையில் இருந்த பெரியகாண்டியம்மனின் தவத்தை கலைத்ததாகவும், பின்னா் அம்மன் அருளால் அவா்கள் மீண்டெழுந்ததாகவும் கருதி ஆண்டுதோறும் இவ்விழா நடத்தப்படுகிறது.