திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் திருமணமான மூன்று நாள்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


திருச்சி: திருச்சியில் திருமணமான மூன்று நாள்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், கடவூா் பகுதியைச் சோ்ந்தவா் மகாமுனி மகள் தங்கமணி (23). இவா், திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த உறவினரான காா்த்திக் என்பவரை காதலித்து கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டாா்.
இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் அணிந்திருந்த நகைகளை பெற்றோரிடம் கழட்டிக்கொடுத்துவிட்டு தங்கமணி காா்த்திக் வீட்டுக்கு வந்துள்ளாா். இதனால் காா்த்திக் வீட்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த தங்கமணி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாருமில்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் தங்கமணியின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...