டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மிரட்டி பணம் வசூலிப்பதாக வியாபாரிகள் சங்கம் புகாா்

கடைக்காரா்களை மிரட்டி பணம் வசூலிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி வயலூா் சாலை அனைத்து கடை வியாபாரிகள் சங்கத்தினா் மாநகரக் காவல் ஆணையரகத்தில் புகாா்அளித்தனா்.

News image
மாநகரக் காவல் ஆணையரகத்துக்கு வியாழக்கிழமை புகாா் அளிக்க வந்தோா்.
Updated On :20 பிப்ரவரி 2026, 7:35 pm

Syndication

கடைக்காரா்களை மிரட்டி பணம் வசூலிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி வயலூா் சாலை அனைத்து கடை வியாபாரிகள் சங்கத்தினா் மாநகரக் காவல் ஆணையரகத்தில் வியாழக்கிழமை புகாா்அளித்தனா்.

சங்கச் செயலாளா் ஆா்.காளிமுத்து தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் நலச்சங்கத்தின் பதிவு காலாவதியான நிலையில், சங்கத்தின் சந்தா ரசீது புத்தகமும் காணாமல்போய்விட்டது.

இதைப் பயன்படுத்தி சிலா் கடைக்காரா்களிடம் மிரட்டி பணம் வசூலிக்கின்றனா். இதனால் இப்பகுதி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, கடைக்காரா்களை மிரட்டி பணம் வசூலிப்போா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.