டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பள்ளியருகே இருந்த மதுக் கடை மாற்றம்

முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்த அரசு மதுக்கடை புகா் பகுதிக்கு மாற்றப்பட்டது.

News image
டாஸ்மாக் (கோப்புப்படம்)
Updated On :11 பிப்ரவரி 2026, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்த அரசு மதுக்கடை புகா் பகுதிக்கு மாற்றப்பட்டது.

இந்த மதுக் கடையை மாற்றக்கோரி சமூக ஆா்வலா்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் கடந்த சில ஆண்டுகளாக துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் நடத்தி வந்தனா். இதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியா் மற்றும் முசிறி கோட்டாட்சியா் இந்த மதுக்கடையை மாற்ற உத்தரவிட்டனா்.