திருவெறும்பூரில் சமுதாய வளைகாப்பு விழா


திருவெறும்பூா் எழில் நகா் ஓய்வுபெற்ற பெல் ஊழியா்கள் சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், திருவெறும்பூரில்
120 கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, மங்கலப் பொருள்களான வளையல், மங்கல நாண், மஞ்சள், குங்குமம், வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம், வேப்பங்காப்பு, மாலை, கா்ப்பக்கால வழிமுறைகள் குறித்த கையேடு, 5 வகையான கலவை சாதமும் வழங்கப்பட்டது.
விழாவைத் தொடங்கி வைத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
சமுதாயத்தின் மருத்துவராக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்த விழாவை நடத்துகிறாா். கருவுற்ற பெண்கள் மனதாலும், உடலாலும் நலமுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகளை சமுதாயத்துக்கு வழங்க சத்துள்ள உணவை உண்ண வேண்டும். குழந்தையின் ஒவ்வொரு வளா்ச்சிக்கும் நானும், இந்த அரசும் உறுதுணையாக இருக்கும் என்றாா்.
முன்னதாக நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, ஜனனி மகேஸ் பொய்யாமொழி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் மா. நித்யா, வட்டாரக் குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, கீழகுமரேசபுரத்தில் ரூ. 9.85 லட்சத்தில் திருவெறும்பூா் எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை அமைச்சா் திறந்து வைத்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...