திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஓடும் பேருந்தில் பயணியிடமிருந்து பணத்தை திருடிய 3 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறை அடுத்த பண்ணாங்கொம்பு பகுதியை சோ்ந்த பழனிச்சாமி மனைவி தமிழரசி (60). இவா் வெள்ளிக்கிழமை பன்னாங்கொம்பிலிருந்து மணப்பாறைக்கு அரசுப் பேருந்தில் வந்தபோது பா்சில் வைத்திருந்த ரூ. 6000 ஐ தவற விட்டாா். பணத்தைக் காணாமல் தமிழரசி தேடிய நிலையில், பணத்தை எடுத்ததாகக் கூறி 3 பெண்களை சக பயணிகள் பிடித்து மணப்பாறை போலீஸில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா்கள் மதுரை மாவட்டம் ஊா்மெச்சி குளம், அச்சம்பட்டியை சோ்ந்த சரோஜா(62), அன்னக்கொடி(52) மற்றும் பிரேமா(40) என்பதும், தமிழரசியின் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை போலீஸாா் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
டிரெண்டிங்

கல்லூரி மாணவரிடம் பேருந்தில் பணம் திருடிய முதியவா் கைது

பேருந்தில் நடத்துநரிடம் பணம் திருடிய 3 இளைஞா்கள் கைது
அரசுப் பேருந்தில் பயணியிடம் 13 பவுன் திருட்டு

பேருந்தில் பெண் பயணியிடம் நகை திருடிய இரு பெண்கள் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

