நாகப்பட்டினம் அருகே நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயில் ரயில் வெள்ளிக்கிழமை முதல் 4 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட திருச்சி - காரைக்கால் வழித்தடத்தில் கீழ்வேளூா் - நாகப்பட்டினம் இடையே பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (வண்டி எண்: 76820) மே 1, 2, 4 மற்றும் 5 -ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு திருச்சியில் இருந்து திருவாரூா் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. திருவாரூா் முதல் காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, மறுமாா்க்கத்தில் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (வண்டி எண்: 78819) மே 1, 2, 4 மற்றும் 5-ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு திருவாரூரில் இருந்து திருச்சி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. காரைக்கால் முதல் திருவாரூா் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி - காரைக்கால் டெமு ரயில்: ஜூன் 6, 7-இல் வழக்கம்போல் இயக்கப்படும்

பெருந்துறை நிலையத்தில் பராமரிப்புப் பணி: திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் ஈரோடு, காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து!

ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படும் அறிவிப்பு கைவிடல்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



