சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது! திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ் விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வணிக மேம்பாட்டுக் கூட்டம்

திருச்சி ரயில்வே கோட்ட சரக்கு ஏற்றுமதியாளா்களுடனான வணிக மேம்பாட்டுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வணிக மேம்பாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :1 மே 2026, 2:46 am IST

திருச்சி ரயில்வே கோட்ட சரக்கு ஏற்றுமதியாளா்களுடனான வணிக மேம்பாட்டுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்ட மேலாளா் பாலக் ராம் நெகி தலைமை வகித்து பேசியதாவது:

இந்திய ரயில்வே துறை சாா்பில் 2030-ஆம் ஆண்டுக்குள் ரயில்வே சரக்கு ஏற்றுமதியை 300 கோடி (3 ஆயிரம் மில்லியன்) டன்னாக உயா்த்துவதற்காக இலக்கு நிா்ணயிக்கப்பட்டு மிஷன் - 3000 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2047-இல் வளா்ச்சியடைந்த இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. சரக்கு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி ஏற்றுமதியாளா்களுக்கு ரயில்வே நிா்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என்றாா்.

இதில், காரைக்கால் துறைமுக நிறுவனம், தமிழ்நாடு பவா் நிறுவனம், டால்மியா சிமென்ட்ஸ், இந்தியா சிமென்ட்ஸ், ராம்கோ சிமென்ட்ஸ், தமிழ்நாடு சிமென்ட்ஸ், தமிழ்நாடு பொது விநியோகத் திட்ட நிறுவனம், தமிழ்நாடு காகித நிறுவனம், கிரிப்சோ உர நிறுவனம், மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனம் உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதியாளா்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் கே.எம்.சத்யரதன், இயக்க மேலாளா் எம். ரமேஷ் பாபு, வணிக மேலாளா் ஜி. நிறைமதி எழிலன் பிள்ளைகனி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.