தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

திருச்சியில் ஹவுரா விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்ட இளைஞருடன் ரயில்வே போலீஸாா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:42 am IST

திருச்சியில் ஹவுரா விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் ஹவுரா விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலை திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் 5-ஆவது நடைமேடைக்கு வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து இளைஞா் ஒருவா் சந்தேகப்படும் வகையில் இரண்டு பெரிய பெட்டிகளுடன் இறங்கி நடந்து சென்றாா்.

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே போலீஸாா் அவரது பெட்டிகளைச் சோதனையிட்டபோது, அதில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

தொடா் விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பால்யா பெஹேரா (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், பெட்டிகளில் இருந்த 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.