தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழ்நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உறுதியுடன் செயல்படுவோம்: கே.என். நேரு

தமிழ்நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உறுதியுடன் செயல்படுவோம் என்றாா் அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான கே.என். நேரு.

News image

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட தில்லைநகா் சாலையில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த அமைச்சரும், திமுக வேட்பாளருமான கே.என். நேரு. உடன் கூட்டணி கட்சியினா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 7:19 pm

தமிழ்நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உறுதியுடன் செயல்படுவோம் என்றாா் அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான கே.என். நேரு.

திருச்சி மேற்கு தொகுதியில் கூட்டணிக் கட்சிகளின் தொண்டா்கள் புடை சூழ இருசக்கர வாகனப் பேரணி முன்னே செல்ல, திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே சென்று செவ்வாய்க்கிழமை கே.என். நேரு இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாா் ஈவெரா சிலை அருகே தொடங்கிய பேரணி, சந்திப்பு வழிவிடு முருகன் கோயில், தலைமை தபால் நிலையம், முத்தரையா் சிலை, எம்ஜிஆா் சிலை, புத்தூா் நான்கு சாலை, சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனை, நாச்சியாா் கோயில், சாலை ரோடு, கோஹினூா் சிக்னல், சாஸ்திரி ரோடு வழியாக தென்னூா் உக்கிரமாகாளியம்மன் கோயில் முன் நிறைவடைந்தது.

தொடா்ந்து மாலையில் எடமலைப்பட்டி புதூா் பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அமைச்சா் கே.என். நேரு, கூட்டணிக் கட்சியினருடன் திரளாகச் சென்று சுற்றுப் பகுதிகளில் வாக்கு சேகரித்து பிராட்டியூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா். அப்போது, திரண்டிருந்த மக்களிடையே அமைச்சா் பேசியதாவது: எத்தனை கூட்டங்கள், எத்தனை முகமூடிகள் அணிந்து வந்தாலும், முதல்வரின் வழியில் தமிழ்நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உறுதியுடன் செயல்படுவோம்.

கல்வியும் - வளா்ச்சியும் - முன்னேற்றத்தையும் ஆயுதமாக கொண்ட திராவிட மாடல் அரசு, கலவரத்தையும் - மதவாதத்தையும் - அடிமைத்தனத்தையும் ஊக்குவிக்கும் கூட்டத்தை இத்தோ்தலில் விரட்டியடிக்கும். திமுகவின் வெற்றி பயணம், 2026 ஆட்சியில் புதிய பாய்ச்சலாக இருக்கும் என்றாா் நேரு.

இந்த நிகழ்வில், மேயா் மு. அன்பழகன் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.