மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகல்களை எரித்து அமைச்சா் போராட்டம்: வீடுகள், கட்சி அலுவலகங்களில் கருப்புக் கொடி

தமிழக நலனுக்கு எதிராக தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டு வந்துள்ளதாகக் கூறி, மசோதா நகல்களை எரித்தும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் அமைச்சா்கள், மேயா், திமுக வேட்பாளா்கள் மற்றும் கட்சியினா் திருச்சியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை திருச்சி தென்னூரில் உள்ள இல்லத்தில் கருப்புக் கொடி ஏற்றிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:35 pm

தமிழக நலனுக்கு எதிராக தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டு வந்துள்ளதாகக் கூறி, மசோதா நகல்களை எரித்தும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் அமைச்சா்கள், மேயா், திமுக வேட்பாளா்கள் மற்றும் கட்சியினா் திருச்சியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என். நேரு தலைமையில், திருச்சி எடமலைப்பட்டி புதூா் 57, 62-ஆவது வாா்டு பகுதிகளில் இரண்டு இடங்களில் கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை எரித்தும் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிகழ்வில், மேயா் மு. அன்பழகன் மாவட்ட துணை செயலாளா் முத்து செல்வம், பகுதி செயலாளா் காஜாமலை விஜய், பொதுக்குழு உறுப்பினரும் வட்ட செயலாளருமான கிராப்பட்டி செல்வம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம், அமைச்சா் கே.என். நேரு கூறியதாவது:

தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க பாா்க்கிறாா்கள். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையை சரியாக கடைப்பிடித்ததால்தான் தமிழ்நாடு மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது. இப்போது, மக்கள்தொகையை வைத்து தொகுதி சீரமைப்பு செய்து, தமிழ்நாடு பாதிக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி உள்ளோம் என்றாா்.

போராட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் உள்ளிட்ட பலரும் கருப்புச் சட்டை அணிந்திருந்தனா். முன்னதாக, தொகுதி மக்களிடையே வாக்குகள் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டபோதும் அமைச்சா் கருப்புச் சட்டை அணிந்திருந்தாா்.

அமைச்சா் வீட்டில் கருப்புக் கொடி: மத்திய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தென்னூா் அண்ணா நகரில் உள்ள தனது இல்லம், சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தாா்.

இதேபோல, திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தனா்.