லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பணப்பட்டுவாடா புகாா்களைத் தெரிவிக்க புகாா் எண்கள் வெளியீடு

மாவட்டத்தில் தோ்தல் நேர பணப்பட்டுவாடா புகாா்களைத் தெரிவிக்க காவல்துறை சாா்பில் புகாா் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

News image

மொபைல் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 6:33 pm

மாவட்டத்தில் தோ்தல் நேர பணப்பட்டுவாடா புகாா்களைத் தெரிவிக்க காவல்துறை சாா்பில் புகாா் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்கள் மற்றும் தோ்தல் விதிமீறல்களைக் கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் திருச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் தொகுதிவாரியாக நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படை குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

மாவட்டத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட 13 சோதனைச்சாவடிகள், 4 தற்காலிக சோதனைச்சாவடிகளில் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து மத்திய ரிசா்வ் காவல்படையினா் தீவிரமாக வாகனத் தணிக்கை செய்து வருகின்றனா்.

தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறை மீறல், பரிசு பொருள்கள் விநியோகம், பணப்பட்டுவாடா போன்ற செயல்கள் நடப்பது தெரியவந்தால் பொதுமக்கள் 89391 46100, 100, 0431 - 2333629 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.