மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வேளாண் பட்ஜெட்: விவசாயிகளிடம் கருத்து கேட்க வலியுறுத்தல்

News image

முதல்வர் விஜய். - கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 4:45 am IST

நிகழாண்டு வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்று காவிரி பாதுகாப்பு உழவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வா், தலைமைச்செயலருக்கு அச்சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் கூறியிருப்பது: 2026- 2027- ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தயாரிப்பதற்கு முன், உழவா் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்கிற வகையில் சிறப்பு கூட்டங்கள் மாநிலம் முழுவதும் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைகாவிரி சமவெளி மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களை நான்கு மண்டலங்களாக பிரித்து கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.