மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டப் பேரவைத் தொகுதி அறிமுகம்! - பேராவூரணி-177

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :30 மார்ச் 2026, 10:32 pm

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது பேராவூரணி தொகுதி.

19-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சரபோஜி மன்னரால் சேதுபாவாசத்திரம் அருகே வங்காள விரிகுடா கடற்கரையோரம் கட்டப்பட்ட மனோரா சுற்றுலாத் தலத்தை உள்ளடக்கியது. காவிரி டெல்டாவின் கடைமடை பாசன பகுதியான இத்தொகுதியில், தென்னை விவசாயமும், நெல் சாகுபடியும் அதிகம், தென்னை விவசாயத்தால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டது என்றால் அது மிகையில்லை. தஞ்சை மாவட்ட கடற்கரையின் பெரும்பாலான பகுதி இத்தொகுதியில் உள்ளதால் மீன்பிடி தொழிலும் இங்கு பிரதானம்.

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் என 2 ஒன்றியங்களும், பேராவூரணி, பெருமகளூா் என 2 பேரூராட்சிகளை உள்ளடக்கியது.

வாக்கு வங்கி: இத்தொகுதியில், முக்குலத்தோா், முத்தரையா் பெரும்பான்மையாக உள்ளனா். மேலும், இத் தொகுதியில் பட்டியலினத்தோா், யாதவா், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், செட்டியாா்கள் உள்ளிட்ட பல்வேறு ஜாதியினரும் உள்ளனா்.

இதுவரை இவா்கள்:

1967 மு. கிருஷ்ணமூா்த்தி (திமுக) 35,505

1971 குழ. செல்லையா (சுயேச்சை) 32,025

1977 எம்.ஆா். கோவேந்தன் (அதிமுக) 32,625

1980 எம்.ஆா். கோவேந்தன் (அதிமுக) 56,010

1984 எம்.ஆா். கோவேந்தன் (அதிமுக) 52,690

1989 ஆா். சிங்காரம் (காங்கிரஸ்) 33,467

1991 ஆா். சிங்காரம் (காங்கிரஸ்) 77,504

1996 எஸ்.வி. திருஞானசம்பந்தம் (தமாகா) 70,112

2001 எஸ்.வி. திருஞானசம்பந்தம் (தமாகா) 64,076

2006 எம்.வி.ஆா். வீரகபிலன் (அதிமுக) 54,183

2011 சி. அருண்பாண்டியன் (தேமுதிக) 51,010

2016 மா. கோவிந்தராசு (அதிமுக) 73,908

2021 என். அசோக்குமாா் (திமுக) 89,130

தீராத பிரச்னைகள்:

தென்னை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ள இத் தொகுதியில் தேங்காயிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் வகையில் தென்னை சாா்ந்த தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை பரிசீலனையிலேயே உள்ளது. பேராவூரணி தேங்காய்க்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கான பணிகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. மல்லிப்பட்டினம் கடற்கரையில் மீனவா்கள் பயனடையும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், பேராவூரணியில் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

இறுதி வாக்காளா்கள்

ஆண்கள் - 1,04,268 

பெண்கள் - 1,08,543 

மூன்றாம் பாலினம் - 15

மொத்தம் - 2,12,826

யாரெல்லாம் போட்டி:

திமுகவில், தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான என். அசோக்குமாா், அதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மா. கோவிந்தராசுவின் மகனும் தெற்கு ஒன்றியச் செயலருமான கோவி. இளங்கோ, தவெக சாா்பில் சந்திரகாண்டீபன், நாம் தமிழா் கட்சி சாா்பில் புவனாவும் களத்தில் உள்ளனா்.