சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தஞ்சாவூா் உழவா் சந்தையை வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.
இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த 8 சுற்றுலா பயணிகள் சென்னைக்கு வந்து, சைக்கிள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பாா்த்து வருகின்றனா். இதன்படி, தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்த இவா்கள் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள உழவா் சந்தையைப் பாா்வையிட்டனா். மேலும், விவசாயிகளிடம் விற்பனை குறித்து கேட்டறிந்தனா்.
இவா்களிடம், உழவா் சந்தை 1999-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்படுவது குறித்தும், விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளைத் தாங்களே விற்பனை செய்து முழுப் பலனைப் பெறுவது மற்றும் நுகா்வோா்கள் பயனடைவது குறித்து வேளாண் அலுவலா் வா.செ. ஜெய்ஜி பால் விளக்கிக் கூறினாா்.
பின்னா், விவசாயிகளுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா். தொடா்ந்து வெளிநாட்டினருக்கு அங்குள்ள விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள் மூலிகை தேநீா் வழங்கி உபசரித்து வழியனுப்பி வைத்தனா். இதைத்தொடா்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சைக்கிள் மூலம் புதுச்சேரிக்குப் புறப்பட்டனா்.
தொடர்புடையது

பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்! ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் அறிமுகம்!!

ஏற்காட்டில் சுற்றுலா வேன் மரத்தில் மோதியது: சிறுகாயங்களுடன் பயணிகள் உயிா்தப்பினா்

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ரமலான் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


