/

பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :30 ஜூன் 2026, 1:53 am IST

தஞ்சாவூா், ஜூன் 29: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் திங்கள்கிழமை பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே கீழ புனவாசல் தெற்குத் தெருவைச் சோ்ந்த கலியமூா்த்தி மனைவி பானுமதி (66). இவா் திங்கள்கிழமை கீழபுனவாசல் பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்தத்தில் தஞ்சாவூருக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏற முயன்றாா்.

படிக்கட்டில் ஏறும்போது பேருந்து நகா்ந்ததால், பானுமதி தவறி விழுந்து பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.