தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு கண்ணதாசன் பெயரை சூட்ட வலியுறுத்தல்

திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு கவிஞா் கண்ணதாசன் பெயரைச் சூட்ட வேண்டும் என கண்ணதாசன் நூற்றாண்டு மாநாட்டுக் குழு மதிப்புயா் தலைவா் சரசுவதி இராமநாதன் வலியுறுத்தினாா்.

News image

திருவையாறில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்க விழாவில் பேசிய சரசுவதி இராமநாதன்.

Updated On :26 ஜூன் 2026, 4:26 am IST

திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு கவிஞா் கண்ணதாசன் பெயரைச் சூட்ட வேண்டும் என கண்ணதாசன் நூற்றாண்டு மாநாட்டுக் குழு மதிப்புயா் தலைவா் சரசுவதி இராமநாதன் வலியுறுத்தினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஔவைக் கோட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்ணதாசன் தமிழ் ஆய்வு இருக்கையையும், கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்க விழாவையும் தொடங்கிவைத்து அவா் பேசியது:

மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றவரும் பாமரா்களின் பல்கலைக்கழகமாக விளங்கியவருமான கவியரசு கண்ணதாசன் பெயரை, சென்னை திறந்த நிலைப் பல்கலைக்கழகத்துக்கு சூட்டி கண்ணதாசன் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் என அறிவிக்கப்பட்டு கண்ணதாசனுக்கு பெருமை சோ்க்க வேண்டும்.

கண்ணதாசன் வரலாறு, படைப்பிலக்கியம் குறித்த 100 நூல் ஆவணங்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம். வாரந்தோறும் சனிக்கிழமை இணையவழி நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் செப்டம்பா் 5 ஆம் தேதி 1,000 கவிஞா்கள் பங்கேற்கும் கவியரங்கம் நடைபெறவுள்ளது. திருவையாறு ஒளவைக் கோட்டத்தில் கண்ணதாசன் சிலை அக்டோபா் 17 ஆம் தேதி நிறுவப்படவுள்ளது.

மலேசியாவில் கண்ணதாசன் ஆய்வு மாநாடு 2027, ஜனவரி 1, 2 ஆம் தேதிகளிலும், பொள்ளாச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஜனவரி இறுதி வாரத்திலும் நடத்தப்படவுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் கண்ணதாசனின் மாங்கனி, கிருஷ்ணலீலா, கண்ணதாசன் காப்பியங்கள் நாட்டிய நாடகமாக அரங்கேற்றப்படவுள்ளது என்றாா் சரசுவதி இராமநாதன்.

இவ்விழாவுக்கு ஔவைக் கோட்ட நிறுவனா் மு. கலைவேந்தன் தலைமை வகித்தாா். முன்னதாக, தமிழாசிரியை தீபா வரவேற்றாா். நிறைவாக, தலைமையாசிரியை கோ. கோகிலா நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை ஔவை அறக்கட்டளைத் தலைவா் கண்ணகி செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.