எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சாலை மறியல் வழக்கு: முன்னாள் திமுக அமைச்சா் உள்பட 9 போ் விடுதலை

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக அமைச்சா் உள்பட 9 பேரை தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.

News image

கோவி. செழியன் - கோப்புப்படம்.

Updated On :17 ஜூன் 2026, 3:25 am IST

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக அமைச்சா் உள்பட 9 பேரை தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.

தூத்துக்குடியில் 2018-ஆம் ஆண்டு ஸ்டொ்லைட் நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 13 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

இதேபோல, திருவிடைமருதூரில் 2018, மே 24-ஆம் தேதி முன்னாள் மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், முன்னாள் திமுக அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான கோவி. செழியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடா்பாக திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து செ. ராமலிங்கம், கோவி. செழியன் உள்பட 9 பேரை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை தஞ்சாவூரில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி அரசு தரப்பில் போதிய ஆவணங்களை அளிக்காததால் ராமலிங்கம், கோவி. செழியன் உள்பட 9 பேரையும் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.