தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உலகப் புரட்சியின் அடையாளமாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் விளங்கிய புரட்சியாளா் சேகுவேராவின் 98-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கட்சியின் மாநகரச் செயலா் எம். வடிவேலன் தலைமை வகித்தாா். சேகுவேரா உருவப் படத்துக்கு செவ்வணக்க மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநிலப் பொருளாளா் சந்துரு சிறப்புரையாற்றினா்.
இவ்விழாவில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி. செந்தில்குமாா், கே. அருளரசன், எல். சரவணன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என். குருசாமி, இ.வசந்தி, மாநகரக் குழு உறுப்பினா்கள் ப. சத்தியநாதன், சி. ராஜன், எம். கோஸ்கனி, வெ. அா்ஜூன், தா்மா, எம். ராஜன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










