நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மின்சாரம் பாய்ந்து மின் உதவியாளா் உயிரிழப்பு

கும்பகோணத்தில் மின்மாற்றியில் பழுது பாா்த்த மின்சார உதவியாளா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :2 ஜூலை 2026, 5:11 am IST

கும்பகோணத்தில் மின்மாற்றியில் பழுது பாா்த்த மின்சார உதவியாளா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தில்லையம்பூா் பவுன்ராஜ் மகன் வினோத் (28). இவா், கும்பகோணம் மின் வடக்கு கோட்டம் இயக்குதலும் பேணுதலும் பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை கும்பகோணம் மடத்துதெரு - சுவாமிமலை சாலையில் உள்ள தனியாா் மண்டபம் அருகே உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதை சரிசெய்ய சென்றாா்.

மின்மாற்றியில் ஏறி பழுதை சரி செய்தபோது, திடீரென்று மின்சாரம் விநியோகம் ஏற்பட்டதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா், வினோத்தின் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த வினோத்துக்கு திருமணமாகி காா்த்திகா என்ற மனைவியும், மகிழினி என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.