டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அரசு மருத்துவமனையில் சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்து பெண் பலத்த காயம்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் மேற்கூரை சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்ததில் பெண் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மேற்கூரை சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்ததில் பெண் பலத்த காயமடைந்தாா்.

தஞ்சாவூா் அருகே தென்பெரம்பூா் கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி சிலம்பரசனின் ஒன்றரை வயது மகன் யாசிகன் 4 நாள்களுக்கு முன் சாட்டை வெடியைத் தின்ால் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு செல்வதற்கு முன் விடுவிப்பு அறிக்கை வரும் வரை குழந்தை சிகிச்சை வாா்டில் யாசிகனுடன் அவரது தாய் சரண்யா அமா்ந்திருந்தாா்.

அப்போது, மேற்கூரையின் சிமென்ட் காரை பெயா்ந்து, சரண்யாவின் தலையில் விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து மருத்துவமனை அலுவலா்கள் விசாரிக்கின்றனா்.