டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சேஷம்பாடியில் ரூ.95 லட்சத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி

கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பில் மின் கம்பங்கள் நிறுவும் பணியை புதன்கிழமை க. அன்பழகன்எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பில் மின் கம்பங்கள் நிறுவும் பணியை புதன்கிழமை க. அன்பழகன்எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், சேஷம்பாடி ஊராட்சி அய்யன் திருவள்ளுவா் நகரில் ரூ.95 லட்சம் மதிப்பில் மின்சாரக் கம்பங்கள் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான க. அன்பழகன் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.கல்யாணசுந்தரம், முன்னாள் மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.