நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஓய்வூதியத் திட்டத்துக்கு நெடுஞ்சாலைத்துறையினா் வரவேற்பு

கும்பகோணத்தில் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் சனிக்கிழமை தமிழக அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்று பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 7:37 pm

Syndication

கும்பகோணத்தில் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் சனிக்கிழமை தமிழக அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்று பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் செந்தில்தம்பி தலைமையில் கட்டுமான மற்றும் பராமரிப்பு அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

கடந்த 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு அரசுப் பணியில் சோ்ந்தவா்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் இருந்தது. தற்போது உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்று முதல்வா் ஸ்டாலின், நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று நெடுஞ்சாலைத்துறையினா் தெரிவித்தனா்.