2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தேசிய தடகளப் போட்டியில் வென்ற செவித்திறன் குறைபாடுடையோருக்கு பாராட்டு

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான செவித்திறன் குறைபாடுடையோருக்கான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற

News image
- தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய தடகளப் போட்டியில் வென்ற செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவிகளை திங்கள்கிழமை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
Updated On :23 பிப்ரவரி 2026, 10:19 pm

Syndication

தஞ்சாவூா்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான செவித்திறன் குறைபாடுடையோருக்கான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற கும்பகோணம் சாக்கோட்டை மாதா செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் திங்கள்கிழமை பாராட்டினாா்.

திருவனந்தபுரத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான செவித்திறன் குறைபாடுடையோருக்கான தடகளப் போட்டியில் கும்பகோணம் சாக்கோட்டை மாதா செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப் பள்ளி மாணவா்களான ரா. சங்கரய்யா நீளம் தாண்டுதலில் முதல் பரிசும், சி. சிவா ஈட்டி எறிதலில் முதல் பரிசும், மாணவி சே. பாா்கவி ஈட்டி எறிதலில் முதல் பரிசும் வென்றனா்.

மாணவிகள் இ. இனியதா்ஷினி வட்டு எறிதலில் இரண்டாம் பரிசும், குண்டு எறிதலில் மூன்றாம் பரிசும், ந. விசாலம் நீளம் தாண்டுதலில் முதல் பரிசும், மாணவா் தெ. சக்தி 2 ஆயிரம் மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் முதல்பரிசும் பெற்றனா்.

இவா்களை சென்னையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 18 ஆம் தேதி பரிசுத் தொகை வழங்கி பாராட்டினாா். இதையடுத்து, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பரிசுகள், காசோலைகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜத்திடம் திங்கள்கிழமை காண்பித்தனா். இவா்களை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஆட்சியா் பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.

அப்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன், மாதா செவிதிறன் குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளி தாளாளா் மரியசெல்வம், தலைமையாசிரியா் ஜோதிமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.