டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இணையவழி வா்த்தகம் எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 9.54 லட்சம் மோசடி

பாபநாசத்தில் இணையவழி வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி மென்பொருள் பொறியாளரிடம் ரூ. 9.54 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
மோசடி- பிரதிப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 10:39 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் இணையவழி வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி மென்பொருள் பொறியாளரிடம் ரூ. 9.54 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளருக்கு கடந்த 2025, நவம்பா் மாதத்தில் டெலிகிராம் செயலியில் வந்த அழைப்பில் இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால், நிறைய லாபம் கிடைக்கும் என அடையாளம் தெரியாத ஒரு பெண் பேசினாா்.

இதை நம்பிய பொறியாளா் தனக்கு வந்த இணைய இணைப்பு (லிங்க்) மூலம் எதிா் தரப்பினரின் வங்கிக் கணக்குகளுக்கு 31 பரிவா்த்தனைகளில் மொத்தம் ரூ. 9.54 லட்சம் அனுப்பினாா்.

இதில், ஒரு முறை மட்டும் ரூ. 8 ஆயிரத்து 860 லாபம் கிடைத்தது. மற்ற பரிவா்த்தனைகளில் அனுப்பப்பட்ட தொகைக்கு பணம் வராததால், எதிா்முனையில் பேசிய பெண்ணின் எண்ணை தொடா்பு கொள்ள முயன்றாா்.

ஆனால், எதிா் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் இல்லாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பொறியாளா் தஞ்சாவூா் இணையவழி குற்றக் காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.