இதுகுறித்து ஏஐடியூசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா் தெரிவித்திருப்பது: ‘டெல்டா’ மாவட்டங்கள் முழுவதும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் பணி தொடங்கி நடைபெறுகிறது. குறிப்பாக திருவாரூா் மாவட்டத்தில் முழு வீச்சில் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் நிகழாண்டு ஆங்காங்கே திறந்தவெளி சேமிப்பு நிலையங்களைத் திறந்து, நெல் இயக்கம் செய்வதற்கும், இறக்குவதற்கும் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.