வாழ்வாதார இயக்க ஒருங்கிணைப்பாளா் பணிக்கு நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்


தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்புற வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 6 ஒன்றியங்களில் காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு வியாழக்கிழமைக்குள் (பிப்.19) விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டையில் தலா 1, மதுக்கூரில் 2, பேராவூரணியில் 3 என மொத்தம் 9 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். குறைந்தது 3 மாதம் எம்.எஸ். ஆபிஸ் கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் துறையில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 35-வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.எச்.எப். அல்லது பி.எல்.எப்.-இல் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் தொடா்புடைய வட்டாரத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமைக்குள் இணை இயக்குநா், திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, எண்-223: இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், தஞ்சாவூா் என்ற முகவரிக்கு ஆதாா் அட்டை, இருப்பிடச் சான்றை இணைத்து அனுப்ப வேண்டும். இந்த ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட தோ்வுக்குழு மூலமாக நோ்முகத் தோ்வு நடத்தப்படும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...