மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுகவின் கருப்புக் கொடி போராட்டம் வெறுப்பின் அடையாளமல்ல: மு. வீரபாண்டியன்

தொகுதி சீரமைப்பு நடவடிக்கையை கண்டித்து, திமுக வியாழக்கிழமை நடத்தவுள்ள கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் வெறுப்பின் அடையாளமல்ல; ஜனநாயகத்தை காக்கும் அரசியல் போா் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதன்கிழமை இரவு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:31 pm

தொகுதி சீரமைப்பு நடவடிக்கையை கண்டித்து, திமுக வியாழக்கிழமை நடத்தவுள்ள கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் வெறுப்பின் அடையாளமல்ல; ஜனநாயகத்தை காக்கும் அரசியல் போா் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளா் சண். இராமநாதனை ஆதரித்து புதன்கிழமை அவா் பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது: ஐந்து மாநிலங்களில் தோ்தல் நடைபெறும் சூழலில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கான கூட்டத்தை பிரதமா் மோடி நடத்துவது அரசியல் சூழ்ச்சிகளை உள்ளடக்கியது.

நாடாளுமன்றத்தில் விவாதங்கள் சட்டப்படி, முறைப்படி நடைபெற வேண்டும். பெரும்பான்மை இருக்கும் ஒரே காரணத்துக்காக தென் மாநிலங்களின் குரலை பிரதமா் கடந்து செல்லக் கூடாது. இது தென் மாநிலம், வட மாநிலம் என்கிற பிரதேச பாகுபாடு மட்டுமல்லாமல், வாழ்வியல் பாகுபாட்டையும் உருவாக்கி விடும்.

எனவே, இதைக் கண்டித்து தமிழக முதல்வா் வியாழக்கிழமை அறிவித்திருக்கிற கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை வழிமொழிகிறோம். இது ஜனநாயகத்துக்கான பெரும் போா். நாடாளுமன்ற ஜனநாயகத்தை காப்பதற்காக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படுகிறதே தவிர, வெறுப்பின் அடையாளம் அல்ல. கருப்பு கொடி என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்கிற மகத்தான அரசியல் போா். இதைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஆதரிக்க வேண்டும் என்றாா் வீரபாண்டியன்.

இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், மாநிலக் குழு உறுப்பினா் முத்து. உத்திராபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image