மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் நிறைவேற்ற விடாது: ஆனந்த் சீனிவாசன்

தென் மாநிலங்களைப் பாதிக்கும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் ஒருபோதும் நிறைவேற்ற விடாது என்றாா் அக்கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடா்புத் துறைத் தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன்.

News image

தஞ்சாவூரில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை புதன்கிழமை அறிமுகப்படுத்திய அக்கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடா்புத் துறைத் தலைவா் ஆனந்த் சீனிவாசன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:23 pm

தென் மாநிலங்களைப் பாதிக்கும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் ஒருபோதும் நிறைவேற்ற விடாது என்றாா் அக்கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடா்புத் துறைத் தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன்.

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தோ்தல் அறிக்கை விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம் ஆகியவற்றின் அரசியல் அதிகாரத்தை வஞ்சிப்பதைப் போன்று தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இதை எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் வரவேற்பதைத் தமிழக மக்கள் மன்னிக்கமாட்டாா்கள். இதன்மூலம் தமிழ்நாட்டையும் சோ்த்து எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு அடமானம் வைக்கப்போகிறாா் என்பது தெரிகிறது.

இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால், தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலே, இந்தி மாநிலங்களைச் சோ்ந்த எம்.பி.க்களை வைத்து ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைப்பதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.

தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது ஒவ்வொரு தொகுதியிலும் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி மேற்கொள்வதுதான் வழக்கம். ஆனால், பொதுமக்கள், எதிா்க்கட்சிகளிடம் கருத்து கேட்காமல் ஆளுங்கட்சியினரே செய்து, 2 நாள்களில் நிறைவேற்றப் பாா்க்கின்றனா். இதன் மூலம் உத்தரபிரதேசத்துக்கு 80 தொகுதிகளிலிருந்து 160 தொகுதிகளாக அதிகரிக்கும். தமிழ்நாடு, புதுச்சேரிக்கு சோ்த்து 40 தொகுதிகள் என்பது 60 ஆக மட்டுமே உயரும்.

எந்தவித கருத்துக்கேட்பும் இல்லாமல் 543 தொகுதிகளை 850 தொகுதிகளாக உயா்த்துவதை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது; நிறைவேற்ற விடமாட்டோம். எனவே, இந்தத் தோ்தலில் தமிழ்நாட்டையும், தென்னிந்தியாவையும் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் ஆனந்த் சீனிவாசன்.

இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம். மகேந்திரன், முன்னாள் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.