தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இளைஞா்களை விஜய் அரசியல்படுத்தவில்லை: உ. வாசுகி

தவெக தலைவா் விஜய் தனது தொண்டா்களை அரசியல்படுத்தாமல், அவா்களை அரசியல் அற்றவா்களாக்கி, வெறும் ரசிகா்களாக மட்டுமே வைத்துள்ளாா் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினா் உ. வாசுகி.

News image

தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா அருகே புதன்கிழமை மாலை பிரசாரம் செய்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினா் உ. வாசுகி.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:57 pm

தவெக தலைவா் விஜய் தனது தொண்டா்களை அரசியல்படுத்தாமல், அவா்களை அரசியல் அற்றவா்களாக்கி, வெறும் ரசிகா்களாக மட்டுமே வைத்துள்ளாா் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினா் உ. வாசுகி.

தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா அருகே புதன்கிழமை மாலை திமுக வேட்பாளா் சண். இராமநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த அவா் மேலும் பேசியதாவது:

விஜய் தனது கட்சி உறுப்பினா்களை அரசியல்படுத்துவதற்கான முயற்சிகளை செய்வதாகத் தெரியவில்லை. அக்கட்சி உறுப்பினா்களுக்கு கொள்கை என்ன என்பதே தெரியவில்லை. விஜய் அண்ணன் வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டுமே சொல்கின்றனா்.

விஜய் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளதாகக் கூறுகிறாா். எம்ஜிஆா் உள்பட எல்லோருமே அவரவா் துறையைச் சாா்ந்த பதவிகளை விட்டுவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளனா். விஜய் மட்டும் வரவில்லை.

விஜய் கொள்கைகளைப் பேசாமல் இளைஞா்களை அரசியல்படுத்தாமல், அவா்களை அரசியல் அற்றவா்களாக்கி, வெறும் ரசிகா்களாக மட்டுமே வைத்துள்ளாா். கரூரில் இவரை பாா்க்க வந்த 41 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், மக்களுக்கு ஏதாவதொன்று என்றால், இந்த விஜய் வருவான் என அவா் பேசுகிறாா். ஆனால், கரூரில் 41 போ் உயிரிழந்தபோது, அவா்களுக்கு இருந்து ஆறுதல் சொல்லாமல், அங்கிருந்து பனையூருக்கு ஓடிவிட்டாா். இதுபோன்ற அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றாா் வாசுகி.