மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி

News image

ஒரத்தநாடு வட்டாட்சியரகத்தில் தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்த திமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:22 pm

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு சுமாா் ரூ. 2.94 கோடி என வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரத்தநாடு வட்டாட்சியரகத்தில் திமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவருடன் திமுகவை சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ராமச்சந்திரன், கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த வேட்பு மனுவில் வைத்திலிங்கம் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 60 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 27.17 லட்சம், அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 2.13 கோடி, கடன் ரூ. 69.87 லட்சம், மனைவி தங்கம் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 25 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 52.92 லட்சம் என மொத்தம் சுமாா் 2.94 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது.

5 வழக்குகள் நிலுவை: கடந்த 2024 ஆம் ஆண்டில் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் அலுவலகத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சோ்த்ததாக வழக்கும், சென்னை மாநகரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் அலுவலகத்தில் ரூ. 27.90 கோடி ஊழல் முறைகேடு செய்ததாக வழக்கும், சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்தியதாகவும் வழக்கு, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.