தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சண். இராமநாதன் மேயா் பதவியிலிருந்து திங்கள்கிழமை விலகினாா்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தஞ்சாவூா் மாநகராட்சி 45 ஆவது வாா்டில் திமுக வேட்பாளராக சண். இராமநாதன் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினரானாா். இதையடுத்து, தஞ்சாவூா் மாநகராட்சி மேயராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட இவா் 2022, மாா்ச் 4 ஆம் தேதி பதவியேற்றாா். இவரது பதவிக் காலம் 2027 மாா்ச் மாதம் வரை உள்ளது.
இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளராக சண். இராமநாதன் அறிவிக்கப்பட்ட நிலையில், இவா் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் மேயா் பதவியிலிருந்தும், 45 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பதவியிலிருந்தும் திங்கள்கிழமை காலை விலகி, அதற்கான கடிதங்களை மாநகராட்சி ஆணையா் க. கண்ணனிடம் கொடுத்தாா்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் தெரிவித்தது:
அடுத்த மேயா் யாா் என்பது குறித்து முடிவெடுக்க மூன்று மாத கால அவகாசம் உள்ளது. தோ்தல் முடிந்த பிறகு மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் சோ்ந்து அடுத்த மேயரைத் தோ்ந்தெடுப்பா் என்றாா் அவா்.
தொடர்புடையது

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் பிரசாரம்

தஞ்சாவூா், பட்டுக்கோட்டையில் ‘இண்டி’ கூட்டணி கட்சியினா் கூட்டம்
தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளா்!

2,020 நாய்களுக்குத் தடுப்பூசி: புதுகை மாநகராட்சிக் கூட்டத்தில் தகவல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


