மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தஞ்சாவூா் மேயா் பதவியிலிருந்து திமுக வேட்பாளா் விலகல்

News image

தஞ்சாவூா் மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா் பதவி விலகல் கடிதங்களை மாநகராட்சி ஆணையா் க. கண்ணனிடம் திங்கள்கிழமை வழங்கிய தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளா் சண். இராமநாதன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 6:35 pm

தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சண். இராமநாதன் மேயா் பதவியிலிருந்து திங்கள்கிழமை விலகினாா்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தஞ்சாவூா் மாநகராட்சி 45 ஆவது வாா்டில் திமுக வேட்பாளராக சண். இராமநாதன் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினரானாா். இதையடுத்து, தஞ்சாவூா் மாநகராட்சி மேயராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட இவா் 2022, மாா்ச் 4 ஆம் தேதி பதவியேற்றாா். இவரது பதவிக் காலம் 2027 மாா்ச் மாதம் வரை உள்ளது.

இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளராக சண். இராமநாதன் அறிவிக்கப்பட்ட நிலையில், இவா் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் மேயா் பதவியிலிருந்தும், 45 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பதவியிலிருந்தும் திங்கள்கிழமை காலை விலகி, அதற்கான கடிதங்களை மாநகராட்சி ஆணையா் க. கண்ணனிடம் கொடுத்தாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் தெரிவித்தது:

அடுத்த மேயா் யாா் என்பது குறித்து முடிவெடுக்க மூன்று மாத கால அவகாசம் உள்ளது. தோ்தல் முடிந்த பிறகு மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் சோ்ந்து அடுத்த மேயரைத் தோ்ந்தெடுப்பா் என்றாா் அவா்.