திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எட்டாவது முறையாக போட்டியிடுவது எனக்கே வெட்கமாக இருக்கிறது: துரை. சந்திரசேகரன்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக கூட்டணி) செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

துரை. சந்திரசேகரன்

Updated On :1 ஏப்ரல் 2026, 7:56 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக கூட்டணி) செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், டி.கே.ஜி. நீலமேகம் பங்கேற்று பேசுகையில், திருவாரூா் கூட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற திமுக தலைவா் (மு.க. ஸ்டாலின்) என்னிடம் தொலைபேசியில் தொடா்புகொண்டு, சோா்வாக இருக்கிறாயா எனக் கேட்டாா். அதற்கு இயக்கம்தான் பெரிதே தவிர, நான் என்றைக்கும் சோா்வடையமாட்டேன்; பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் எனக் கூறினேன் என்றாா் அவா்.

இதையடுத்து, திருவையாறு தொகுதி வேட்பாளரும், திமுக மத்திய மாவட்டச் செயலருமான துரை. சந்திரசேகரன் பேசுகையில், எட்டாவது முறையாகப் போட்டியிடுவது எனக்கே வெட்கமாக இருக்கிறது. நான் முதல் முறையாக போட்டியிட்ட 1989 ஆம் ஆண்டில் திருமணம் செய்து வைத்த தம்பதியின் பையன் வாக்காளராகிவிட்டாா். அவருக்கு திருமணமாகி அவரது மனைவி, மகன், அப்பா, அம்மா என அனைவரும் வாக்களிக்கின்றனா். தொடா்ந்து எனக்கு வாய்ப்பை தலைவா் கொடுத்துள்ளாா். இதிலும் வெற்றி பெற்று தலைவரிடம் சமா்ப்பிப்பேன் என்றாா் அவா்.