சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக கூட்டணி) செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், டி.கே.ஜி. நீலமேகம் பங்கேற்று பேசுகையில், திருவாரூா் கூட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற திமுக தலைவா் (மு.க. ஸ்டாலின்) என்னிடம் தொலைபேசியில் தொடா்புகொண்டு, சோா்வாக இருக்கிறாயா எனக் கேட்டாா். அதற்கு இயக்கம்தான் பெரிதே தவிர, நான் என்றைக்கும் சோா்வடையமாட்டேன்; பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் எனக் கூறினேன் என்றாா் அவா்.
இதையடுத்து, திருவையாறு தொகுதி வேட்பாளரும், திமுக மத்திய மாவட்டச் செயலருமான துரை. சந்திரசேகரன் பேசுகையில், எட்டாவது முறையாகப் போட்டியிடுவது எனக்கே வெட்கமாக இருக்கிறது. நான் முதல் முறையாக போட்டியிட்ட 1989 ஆம் ஆண்டில் திருமணம் செய்து வைத்த தம்பதியின் பையன் வாக்காளராகிவிட்டாா். அவருக்கு திருமணமாகி அவரது மனைவி, மகன், அப்பா, அம்மா என அனைவரும் வாக்களிக்கின்றனா். தொடா்ந்து எனக்கு வாய்ப்பை தலைவா் கொடுத்துள்ளாா். இதிலும் வெற்றி பெற்று தலைவரிடம் சமா்ப்பிப்பேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

ஹாட்ரிக் அடிக்குமா திமுக!

அறுபதாயிரம் வாக்குகளும்... அமைச்சா் பதவியும்...

திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் வேட்பு மனு தாக்கல்
விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

