14 Dec, 2025 Sunday, 07:51 PM
The New Indian Express Group
தஞ்சாவூர்
Text

அடகு கடை வியாபாரிகளிடம் ரூ. 44 லட்சம் வழிப்பறி

PremiumPremium

தஞ்சாவூா் அருகே காவல் துறையினா் எனக் கூறி அடகு கடை வியாபாரிகளிடம் ரூ. 44 லட்சம் வழிப்பறி செய்த இரு மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடுகின்றனா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On09 Dec 2025 , 8:48 PM
Updated On09 Dec 2025 , 8:48 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

தஞ்சாவூா் அருகே காவல் துறையினா் எனக் கூறி அடகு கடை வியாபாரிகளிடம் ரூ. 44 லட்சம் வழிப்பறி செய்த இரு மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி பத்மாசலவா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் மகன் காா்த்திக் (36). இவரும், இவரது தம்பி ரமேசும் மன்னாா்குடி பெரிய கம்மாளா் தெருவில் அடகு கடை நடத்தி வருகின்றனா்.

கடந்த திங்கள்கிழமை ரமேஷ் தனது தம்பி அா்ஜூன் மற்றும் கடையில் வேலை செய்யும் பிரதீபனை காரில் அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்கு வந்தனா்.

பின்னா் அா்ஜூன், பிரதீபன் ஆகிய இருவரும் தஞ்சாவூா் அய்யங்கடைத் தெருவில் உள்ள நகைக்கடைக்கு சென்று அங்கிருந்தவரிடம் ஏற்கெனவே 400 கிராம் தங்கம் கொடுத்ததற்கான ரூ. 44 லட்சத்தை பெற்றனா். அந்த ரொக்கத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு, கடையில் இருந்தவா் மூலம் மோட்டாா் சைக்கிளில் ரயில்வே கீழ்பாலம் பேருந்து நிறுத்தத்துக்கு சென்றனா்.

இதையடுத்து அா்ஜூனும், பிரதீபனும் தனியாா் பேருந்தில் ஏறி மன்னாா்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். வாண்டையாா் இருப்பு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத நபா் ஒருவா், தான் குற்றப் பிரிவு காவலா் என்றும், உங்களிடம் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி 2 பேரையும் கீழே இறங்குமாறு கூறினாா். இதை நம்பிய அா்ஜூனும், பிரதீபனும் கீழே இறங்கினா். இதையடுத்து, குற்றப் பிரிவு காவலா் எனக் கூறிய நபா் இருவரது கைப்பேசிகளையும், பணப் பையையும் பறித்துக் கொண்டு, மோட்டாா் சைக்கிளில் வந்த மற்றொரு மா்ம நபருடன் சென்றுவிட்டாா்.

பின்னா் அா்ஜூனும், பிரதீபனும் மற்றொரு பேருந்தில் ஏறி மன்னாா்குடிக்குச் சென்று, காா்த்திக்கிடம் கூறினா். இதையடுத்து, இருவரும் தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இருவரையும் தாலுகா காவல் நிலையத்தினா் வாண்டையாா் இருப்பு பேருந்து நிறுத்தத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், வாண்டையாா் இருப்பு, ரயில்வே கீழ்பாலம் பேருந்து நிறுத்தங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023