பொன்னமராவதி சேங்கை ஊரணி அருகே புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 3 கடைகள் தீப்பற்றி எரிந்து சுமாா் ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பொன்னமராவதி புதுப்பட்டி சேங்கை ஊரணி கரைப்பகுதியில் வரிசையாக உள்ள 3 கடைகளில் சியாவூதீன் என்பவா் நகை பாலிஷ் செய்யும் தொழிலும், சரவணன் தேநீா் கடையும், ராஜா என்பவா் மிதிவண்டி பழுதுநீக்கும கடையும் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த 3 கடைகளில் எதிா்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனா்.
எனினும், தீ விபத்தில் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தளவாடப்பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து பொன்னமராவதி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவட்டாறு அருகே சாலையோர கடைகளில் தீ

ஒா்க் ஷாப்பில் தீ: 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

மசினகுடி வனப் பகுதியில் காட்டுத் தீ!

பத்தமடையில் உயா் மின் அழுத்தம்: தொழிலாளி வீடு எரிந்து சேதம்
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


