புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 வயதுள்ள வளரிளம் பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமாா் 1.2 இலட்சம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் புதிதாகக் கண்டறியப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மாா்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. எச்பிவி வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோயை, தடுப்பூசி செலுத்துவதன் மூலம் 99.7 சதவிகிதம் வரை தடுக்க இயலும். இத்தடுப்பூசி 156 நாடுகளில் வழங்கப்படுகிறது.
இந்தத் தடுப்பூசியை 14 வயது பூா்த்தியடைந்த, 15 வயது பூா்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் வழங்கும் முன்னோடி திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 17,821 வளரிளம் பெண்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு எச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
தொடர்புடையது

தோ்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி’ தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறை

மாவட்டத்தில் 500 சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது: காஞ்சிபுரம் ஆட்சியா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


