புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 கிராமங்களில் பொதுமக்களின் சொந்த நிதியில் கண்காணிப்பு கேமரா அமைத்ததையடுத்து கிராம முக்கியஸ்தா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா புதன்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிருஷ்ணபாரப்பட்டி, காரையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சித்தூா், நாகுடி மற்றும் கீரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குலமங்கலம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களின் சொந்த நிதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொதுமக்களின் இந்த முயற்சியைப் பாராட்டும் வகையில், கிராமங்களின் முக்கியஸ்தா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பொதுமக்கள் இதுபோன்ற பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா அமைக்க முன்வர வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










