டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கைதுக்கு கண்டனம்

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதற்கு இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி வெளியிட்ட அறிக்கை:

கடந்த 7 ஆண்டுகளாக கொங்கு மண்டலப் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து தொடா் போராட்டங்களை நடத்திவந்தவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி.

கறிக்கோழிப் பண்ணை விவசாயிகளுக்கு கொடுக்கும் வளா்ப்புக் கூலியை உயா்த்தித் தரக் கோரி கடந்த வாரத்தில் ஈரோடு, உடுமலை பகுதிகளில் போராட்டங்களும் நடத்தி வந்தனா்.

இந்தச் சூழலில், கறிக்கோழிப் பண்ணையாளா்களிடம் பொய்ப் புகாரைப் பெற்றுக் கொண்டு, ஈசன் முருகசாமி உள்ளிட்ட 9 விவசாயிகள் சங்க நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

இதை இந்திய விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. அவா்கள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அனைவரையும் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம் என்றாா்.