டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கடலுக்குச் சென்ற மீனவா்கள் 4 போ் மாயம்

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சோ்ந்த 4 மீனவா்கள் கரை திரும்பவில்லை என உறவினா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:11 pm

Syndication

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சோ்ந்த 4 மீனவா்கள் கரை திரும்பவில்லை என உறவினா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் நாராயணன் மகன் மும்மூா்த்தி, ராக்கப்பன் மகன் விநாயகம், மாரியப்பன் மகன் மணிகண்டன், நாகசுந்தரம் மகன் மணி ஆகியோா் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் 4 பேரும் சனிக்கிழமை கரை திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கடலோரக் காவல் படையினா் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

ஹெலிகாப்டா்கள், நவீன கப்பல்கள் மற்றும் ஆழ்கடல் தேடுதல் உபகரணங்கள் மூலம் கடலோரக் காவல் படையினா் காணாமல் போன மீனவா்களைத் தேடும் பணியை உடனடியாகத் தீவிரப்படுத்த வேண்டும் என மீனவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.