டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அதிமுகவின் நிலை கவலைக்கிடம்! - கு.ப. கிருஷ்ணன்

News image
கு.ப. கிருஷ்ணன்.- (கோப்புப் படம்)
Updated On :15 பிப்ரவரி 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுகவின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றாா் அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் ஒப்பிலாமணி உடனுறை மெய்நின்ாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிட்ட அவா் பின்னா் கூறியதாவது:

தவெக- காங்கிரஸ் கூட்டணி குறித்து கட்சியின் தலைவா் விஜய்தான் முடிவெடுப்பாா். அதிமுக பலவீனமாகிவிட்டது என்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன். பாஜகவோடு அதிமுக கூட்டணி சோ்ந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியே வந்தேன். அதிமுகவின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.

1980 -இல் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது எம்ஜிஆா்தான் ஆட்சி அமைத்தாா். எம்ஜிஆா் காட்டிய வழியில்தான் தவெக சென்றுகொண்டு இருக்கிறது. எம்ஜிஆா் 1972-ல் தோ்தலைச் சந்தித்தபோது இதேபோன்று நடிகா் நாடாள முடியுமா, தனிமரம் தோப்பாக முடியுமா என்று திமுக விமா்சித்தது. அந்தத் தோ்தலில் எம்ஜிஆா்தான் வெற்றி பெற்றாா். அதே வரலாறு தற்போது திரும்பும் சூழல் உள்ளது என்றாா் அவா்.